எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

உன்னிடம் நான் யாசிப்பது வேறொன்றுமில்லை,
ஒரு கோப்பை தேநீரும்,
நிலவின் கீழ் சில வார்த்தைகளும்..,

இரவின் நிலவு எனக்குச் சொந்தமில்லை,
கோப்பை தேநீர் உனக்கும்தான்

என் பிழை
உன் முதல் வார்த்தையில் - இந்த,
தேநீர் ஆறிவிட்டிருந்தது..,

Kesavan.M
2007

No comments: