எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..






உண்மை தான்!
ஒரு நல்ல கவிதை,
உன் போலவே
அரிதாகி விட்டது.,

வாசிப்பதும்
யோசிப்பதும்
யாசிப்பதும் - ஏன்
முயற்சிப்பதும் தான்.,

முற்றுப்புள்ளி யின்றி
தொடரவே யாசை
முடிந்துவிட்ட அந்த
கடைசி வரியில்.,

குறுகிய அத்தருணத்தில்
நிறைகள்,குறைகள்
நீடித்திருக்கலாம்-ஆயினும்
குறுகச் சொல்லவில்லை.,

புசித்தால் பசிக்கும்
சுவையின் தாபமிது.
முடியும் பயமின்றி
தொடரும் என்பயணம்.,

.,
.,
.,

விடைபெறு முன்
விம்மிச் சிரிக்கும்
கடைசிக் காட்சிகள்
உனக்கும் போலவே.,

No comments: