எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

வந்தான் குகன்





  • அன்னமிடச் செய்தாள் - என்னை
    அண்ணனாக்கிக் கொண்ட வள்
    பின்னும் என்னடி ஊடல்- உன்
    மன்னவன் தேடி வந்த வேளையில்?
  • கைப்பிடித்து வந்தவன் - உள்ளங்
    கால் பிடித்தும் விடுவாள்
    தோள் சாயும் சமயம் - நான்
    தாழ் சேர்ந்து போவேனோ?
  • அன்னை உண்டு அருகில்
    அண்ண னழைப்பான் தொலைவில்
    நங்கைக் குண்டோர் நல்லூர்
    மங்கை மடிசாயும் கரைக்காற்று.
  • தாலிக்கு துடிக்கும் கழுத்து,
    தோழிக்கு துப்பட்டா எதுக்கு?
    நாழிக்கு உண்டோ பொறுமை?
    தாழிக்குள் திமிறும் காதல்.
  • திருநாள் வருடமும் உனக்கு.
    இருநா ளென அதை செய்குவோம்.
    வரும்நா ளெல்லாம் வசந்தமே,
    வருவான் நீயும் விழித்திரு

No comments: