எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

நீளக் கூந்தல் தேவையில்லை







உன்னோடு உரையாடிய
அந்த நடுச்சாமம்
எனக்கு விடியவேயில்லை

நீ உசுப்பிவிட்ட
அந்த ஞாயிறு
இன்னமும் சாயவில்லை;எனக்கு,

என் மேஜை
நாட்காட்டி மட்டும்
ஏனோ ,பொய்யுரைக்கிறது, தினமும்.,

நம்மோடு நடமாடிய
நக்ஷ்த்திரங்கள்
பகலிலும் இப்பொழுது
புலப்படுகிறது.,

நீ பரிமாறிய
மீன் வறுவலின் கைம்மணம்
என்றென்றும் கற்பனையில்.,

நீளக் கூந்தல் எனக்கு
தேவையில்லை - அது
நீயா யிருக்கும் பட்ஷத்தில்.,

நீ கிசுகிசுத்த
என் காதல்
இன்னமும் காதில்.,

நீ சுவாசித்த
தென்றல் பத்திராய்
என் நெஞ்சினுள்.,

உன்னையும்,என்னையும்
தழுவிய நிலவின் குளிர்
ஸ்பரிசம் விலகவேயில்லை;அப்படியே.,

மலர்கள் மலர்ந்தால்
மட்டும்.,
நீ யிருக்கையில் எனக்கு
நீருக்குள் தாகமோ?

No comments: