Posted by
கேசவன் முத்துவேல்
|
- அன்னமிடச் செய்தாள் - என்னை
அண்ணனாக்கிக் கொண்ட வள் பின்னும் என்னடி ஊடல்- உன் மன்னவன் தேடி வந்த வேளையில்? - கைப்பிடித்து வந்தவன் - உள்ளங்
கால் பிடித்தும் விடுவாள் தோள் சாயும் சமயம் - நான் தாழ் சேர்ந்து போவேனோ? - அன்னை உண்டு அருகில்
அண்ண னழைப்பான் தொலைவில் நங்கைக் குண்டோர் நல்லூர் மங்கை மடிசாயும் கரைக்காற்று. - தாலிக்கு துடிக்கும் கழுத்து,
தோழிக்கு துப்பட்டா எதுக்கு? நாழிக்கு உண்டோ பொறுமை? தாழிக்குள் திமிறும் காதல். - திருநாள் வருடமும் உனக்கு.
இருநா ளென அதை செய்குவோம். வரும்நா ளெல்லாம் வசந்தமே, வருவான் நீயும் விழித்திரு |
Posted by
கேசவன் முத்துவேல்
|
கொங்கையை கொண்டாடுபவன் நானோ? கங்கையென ஊறும் காமமிது நங்கை நின் பால் - நான் திங்கள் சூடும் மல்லி தற்று. |
Posted by
கேசவன் முத்துவேல்
|
உண்மை தான்! ஒரு நல்ல கவிதை, உன் போலவே அரிதாகி விட்டது.,
வாசிப்பதும் யோசிப்பதும் யாசிப்பதும் - ஏன் முயற்சிப்பதும் தான்.,
முற்றுப்புள்ளி யின்றி தொடரவே யாசை முடிந்துவிட்ட அந்த கடைசி வரியில்.,
குறுகிய அத்தருணத்தில் நிறைகள்,குறைகள் நீடித்திருக்கலாம்-ஆயினும் குறுகச் சொல்லவில்லை.,
புசித்தால் பசிக்கும் சுவையின் தாபமிது. முடியும் பயமின்றி தொடரும் என்பயணம்.,
., ., .,
விடைபெறு முன் விம்மிச் சிரிக்கும் கடைசிக் காட்சிகள் உனக்கும் போலவே., |