எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label இரவு. Show all posts
Showing posts with label இரவு. Show all posts

குமிழ் மட்டும் காமம்





  • நீர் சூழ்ந்த குமிழென
    ஆசைகள் சூழ்ந்த காதலில்
    நான் மிதந்து வந்தேன்.
  • உனக்கென கொண்டுவருகிறென்,
    கணக்கென கூடாத
    கட்டிலடங்கா காமங்கள்,
    பொத்திக்கொண்டு.
  • மட்டத்தின் மத்தியில்
    பட்டென தெறித்துவிடும்
    இந்த குமிழ்.
  • காற்றோடு கரையும் - என்
    வாசங்கள், - நீ இல்லை
    சுவாசிப்பதற்கு.
  • திசைகள் தேடியலையும் - இந்த
    களவுகள் என்
    கட்டி லில்லை.
  • குமிழ் மட்டும் காமம், - குங்குமச்
    சிமிழ் மாறும் தருணம் - இந்த
    காதல் மூழ்கிவிடும்.

துளித்துவிட்ட மேகம்






  • இவள் என் தேவதை.
    எனினும்,
    துளித்துவிட்ட மேகம்.

  • விரும்பிய நிலம்
    சேரும்
    நீர் அல்லாள்.

  • சேரும் நிலம்
    நிறம் மாறும்
    விதி இவள்தற்று.

  • வெட்கம் கொண்ட
    பெட்டையென,
    கண்ணீர் சிந்தும் மழையில்
    நான் நனைகிறேன்

நுணி மேலொரு பனி






விதவையாய் போய்விட்ட - என்
வெற்றுப்பக்கங்களை
வரிகள் கிறுக்கி
வளம் சேர்த்துவிட்டாள்

மழைத்த காலையின்
முளைத்த காளானென
உள்ளத்தின் காமம்
நட்டுவிட்டு போகிறாள்

பட்டுப்போன மரத்தின்
பொத்திவைத்த மொட்டுக்கான -நீர்
இட்டு காமம் வளர்க்கிறாள்

துளிர்க்கும் பச்சையென
பரவும் இச்சையுது.
காமத்தின் முத்தமென
நுணி மேலொரு பனி.

பூக்களை எப்போது ஏமாற்றினாய்?






நீ தாவணியிட்டு வந்த
நாளெல்லாம் என்னால்
பூக்களை இரசிக்க முடியவில்லை.

உன்மேல் கோபம் கொண்ட
பூக்கள் என்னைத்தான்
திட்டுகின்றன. மலரை
எப்போது ஏமாற்றினாய்?

ஏகபத்தினி விரதன் வேண்டி
நீ இராமன் காண்கிறாய்.
சீதைக்குதானே தெரியும்,
இராமனின் சஞ்சலம்.
சீதைக்கும் எதிரி - நீ.

நீ தூதுசென்ற காதல் எல்லாம்
பாதி பிரிந்த கதை தெரியுமா?
கானும் கண்கள் யாவும் - உன்னை
கண்டு காதல் கொள்ளும் போதுமா?

போகும் பாதை எங்கும் உன்னை
கால்கள் தொடர்ந்து பிண்ணும்.
காலம் கடக்கும் கணங்கள் - உன்பால்
காதல் வேண்டி நிற்கும்!

நீ நடந்து கொண்டேயிரு.
திரும்பிவிட்டால் - என்
கவிதைகளும் கற்பனை
முடங்கிவிடும்.
தொடர்ந்துவருவேன் - நான்