Posted by
கேசவன் முத்துவேல்
|
- நீர் சூழ்ந்த குமிழென
ஆசைகள் சூழ்ந்த காதலில் நான் மிதந்து வந்தேன். - உனக்கென கொண்டுவருகிறென்,
கணக்கென கூடாத கட்டிலடங்கா காமங்கள், பொத்திக்கொண்டு. - மட்டத்தின் மத்தியில்
பட்டென தெறித்துவிடும் இந்த குமிழ். - காற்றோடு கரையும் - என்
வாசங்கள், - நீ இல்லை சுவாசிப்பதற்கு. - திசைகள் தேடியலையும் - இந்த
களவுகள் என் கட்டி லில்லை. - குமிழ் மட்டும் காமம், - குங்குமச்
சிமிழ் மாறும் தருணம் - இந்த காதல் மூழ்கிவிடும். |
Posted by
கேசவன் முத்துவேல்
|
- இவள் என் தேவதை.
எனினும், துளித்துவிட்ட மேகம். - விரும்பிய நிலம்
சேரும் நீர் அல்லாள். - சேரும் நிலம்
நிறம் மாறும் விதி இவள்தற்று. - வெட்கம் கொண்ட
பெட்டையென, கண்ணீர் சிந்தும் மழையில் நான் நனைகிறேன் |
Posted by
கேசவன் முத்துவேல்
|
விதவையாய் போய்விட்ட - என் வெற்றுப்பக்கங்களை வரிகள் கிறுக்கி வளம் சேர்த்துவிட்டாள்
மழைத்த காலையின் முளைத்த காளானென உள்ளத்தின் காமம் நட்டுவிட்டு போகிறாள்
பட்டுப்போன மரத்தின் பொத்திவைத்த மொட்டுக்கான -நீர் இட்டு காமம் வளர்க்கிறாள்
துளிர்க்கும் பச்சையென பரவும் இச்சையுது. காமத்தின் முத்தமென நுணி மேலொரு பனி. |
Posted by
கேசவன் முத்துவேல்
|
நீ தாவணியிட்டு வந்த நாளெல்லாம் என்னால் பூக்களை இரசிக்க முடியவில்லை. உன்மேல் கோபம் கொண்ட பூக்கள் என்னைத்தான் திட்டுகின்றன. மலரை எப்போது ஏமாற்றினாய்? ஏகபத்தினி விரதன் வேண்டி நீ இராமன் காண்கிறாய். சீதைக்குதானே தெரியும், இராமனின் சஞ்சலம். சீதைக்கும் எதிரி - நீ. நீ தூதுசென்ற காதல் எல்லாம் பாதி பிரிந்த கதை தெரியுமா? கானும் கண்கள் யாவும் - உன்னை கண்டு காதல் கொள்ளும் போதுமா? போகும் பாதை எங்கும் உன்னை கால்கள் தொடர்ந்து பிண்ணும். காலம் கடக்கும் கணங்கள் - உன்பால் காதல் வேண்டி நிற்கும்! நீ நடந்து கொண்டேயிரு. திரும்பிவிட்டால் - என் கவிதைகளும் கற்பனை முடங்கிவிடும். தொடர்ந்துவருவேன் - நான் |