எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label தாகம். Show all posts
Showing posts with label தாகம். Show all posts

மல்லபுரத்து உரையாடல்.,







  • வெயில் உரைப்பதில்லை.,
    தேகம் கருப்பதில்லை.,
    தாகம் தவிக்கவில்லை.,
    உன்னோடு உரையாடிய
    மல்லபுரத்து மணல்.,


மு.கேசவன்
2008-12-30

துளித்துவிட்ட மேகம்






  • இவள் என் தேவதை.
    எனினும்,
    துளித்துவிட்ட மேகம்.

  • விரும்பிய நிலம்
    சேரும்
    நீர் அல்லாள்.

  • சேரும் நிலம்
    நிறம் மாறும்
    விதி இவள்தற்று.

  • வெட்கம் கொண்ட
    பெட்டையென,
    கண்ணீர் சிந்தும் மழையில்
    நான் நனைகிறேன்

பூக்களை எப்போது ஏமாற்றினாய்?






நீ தாவணியிட்டு வந்த
நாளெல்லாம் என்னால்
பூக்களை இரசிக்க முடியவில்லை.

உன்மேல் கோபம் கொண்ட
பூக்கள் என்னைத்தான்
திட்டுகின்றன. மலரை
எப்போது ஏமாற்றினாய்?

ஏகபத்தினி விரதன் வேண்டி
நீ இராமன் காண்கிறாய்.
சீதைக்குதானே தெரியும்,
இராமனின் சஞ்சலம்.
சீதைக்கும் எதிரி - நீ.

நீ தூதுசென்ற காதல் எல்லாம்
பாதி பிரிந்த கதை தெரியுமா?
கானும் கண்கள் யாவும் - உன்னை
கண்டு காதல் கொள்ளும் போதுமா?

போகும் பாதை எங்கும் உன்னை
கால்கள் தொடர்ந்து பிண்ணும்.
காலம் கடக்கும் கணங்கள் - உன்பால்
காதல் வேண்டி நிற்கும்!

நீ நடந்து கொண்டேயிரு.
திரும்பிவிட்டால் - என்
கவிதைகளும் கற்பனை
முடங்கிவிடும்.
தொடர்ந்துவருவேன் - நான்






பூக்காரியின் பேரம் - கைச்
சுண்டலின் காரம்.
இருக்கையின் ஓரம்
நீ ஊட்டுகிறாய்

காலையின் வேகம்,
சாலையின் தாகம்,
காதலின் தேகம் பட்டு - உன்
காரம் இனிக்கிறது.

இளம் Romeoவின்
கல்லூரி Juliet - காதல் மறக்க
உன் விரல் ஸ்பரித்து என்
வெட்கம் பீறிடும்

உன் அருகமையின் எதிர்
என் சலனம் போரிடும்
பலன் அறியேன்!
விரல் கடித்து விளையாடும்
சிறுவன் நான்.

வெட்கம் என்னை தின்னும் நேரம் - உன்
பக்கம் நான் ஒளிந்து கொள்வேன்
மிச்சம் ஒன்று இல்லை - என்
இச்சை எங்கு செல்லும்?சொல்லடி.

முத்தம் ஒன்று கொடுத்துவிட்டேன் - உன்
சத்தம் எல்லாம் அடங்கிவிடும்.
நித்தம் உனக்கு வேண்டுமெனில் - மீண்டும்
உன் விரல் கடித்து விளையாடுவேன்.

உயிரின் சுவாசம் !






உயிரின் சுவாசம் அறியாது
உன் மேனி வாசம் புரியாது - என்
உணர்வுகள் இங்கு இறந்துவிடும்
காதல் அங்கு பிறந்துவிடும்
காதல் இங்கு தொடங்கிவிடும்

மனம் என்றும்
தொடர் சடுகுடு விளையாடும்
மோதல் இங்கே முடிந்துவிடும் - உயிரின்
மோட்சம் இங்கே தொடங்கிவிடும்.

தூக்கம் ஏனோ தொலைந்துவிடும்
துயரம் மட்டும் தொடர்ந்துவிடும்.

ஆற்றல் இங்கே சிதைந்துவிடும்
ஆண்மை இங்கே அடங்கிவிடும்

உயிரும் ஒரு நாள் ஓய்ந்துவிடும்
திருநாள் வந்த
ஒரு தலைக் காதல் பிரிந்துவிடும்..,

நீளக் கூந்தல் தேவையில்லை







உன்னோடு உரையாடிய
அந்த நடுச்சாமம்
எனக்கு விடியவேயில்லை

நீ உசுப்பிவிட்ட
அந்த ஞாயிறு
இன்னமும் சாயவில்லை;எனக்கு,

என் மேஜை
நாட்காட்டி மட்டும்
ஏனோ ,பொய்யுரைக்கிறது, தினமும்.,

நம்மோடு நடமாடிய
நக்ஷ்த்திரங்கள்
பகலிலும் இப்பொழுது
புலப்படுகிறது.,

நீ பரிமாறிய
மீன் வறுவலின் கைம்மணம்
என்றென்றும் கற்பனையில்.,

நீளக் கூந்தல் எனக்கு
தேவையில்லை - அது
நீயா யிருக்கும் பட்ஷத்தில்.,

நீ கிசுகிசுத்த
என் காதல்
இன்னமும் காதில்.,

நீ சுவாசித்த
தென்றல் பத்திராய்
என் நெஞ்சினுள்.,

உன்னையும்,என்னையும்
தழுவிய நிலவின் குளிர்
ஸ்பரிசம் விலகவேயில்லை;அப்படியே.,

மலர்கள் மலர்ந்தால்
மட்டும்.,
நீ யிருக்கையில் எனக்கு
நீருக்குள் தாகமோ?