Posted by
கேசவன் முத்துவேல்

|
•அனலென காமம் கனலென காதல் மணல் திரித்த மஞ்சள் கழுத்தில் முடிந்த கதையுது.
•கங்கையெனன காதல் இது. எங்கு பொங்குது?எத்துணை பொங்குது? பாவமெது?மோட்சமெது? மங்கை மிதக்கும் பாற்கடலோ?
•உள்ளங்கால் பிடித்த போது, உச்சி முகர்ந்த போது, உதடு முத்தமிட்ட போது, உணரவில்லை., பொய்யென இவை.
•ஒலிக்கவேண்டிய மேளம் - எனக்கு ஒப்பாரியாய் ஏன் அழுகிறது? விழித்திருக்க வேண்டிய இரவு - ஏன் சுருண்டு இருண்டிருக்கிறது?
•நீயும்,நானும் சமைப்போம். ரசமெல்லாம் இனிக்கும். பிசைந்து ஊட்டும் போது புளிப்பு ஏது? புலன் ஏது?
•எனக்கான மஞ்சள் நீர்த்தோ? உனக்கென நீராடிவிட்டாய். வெற்றிடம் வெல்லும் காற்றென வியாப்பித்துவிட்டாய் மனமெங்கும்.
மு.கேசவன் 2009-04-01
|
Posted by
கேசவன் முத்துவேல்
|
- ஒரு மல்லி சூடவில்லை
ஒரு மல்லி கசங்கவில்லை ஒரு புடவை கூடவில்லை ஒரு புடவை களையவில்லை - அன்னம் பால் ஊட்டவில்லை
கிண்ணம் தேன் சுவைக்கவில்லை எண்ணம் எங்கும் காதல் தின்னத் தோனும் காமம். - விருந்தினர் வாராத நமதில்லத்தில்
வெறுந்தரையில் நாம் காதலிப்போம். எனை நீராட்ட முயற்சித்து உனை குளிப்பாட்டிக் கொள்வாய். - ஒருதட்டில் பசியாருவோம்
நான் புசித்திருக்க நீ கையலம்புவாய் நீ புசித்தவுடன் நான் விரல் கட்டே போட்டுக்கொள்வேன்.வலியில்லை. - ஒரு போர்வைக்குள் இருதூக்கம் எப்படி?
சிறு குழந்தையென வினவுகிறாய். ஒருபோர்வைக்குள் எதுக்கடி தூக்கம்? பெருங் குறும்புகள் புரிவோம் வா., - வடிந்தவுடன் முடிந்துவிடும் காமமன்று
விடிந்த பின்னும் ஓடும் காதல்நதி நமது ஒடிந்தாலும் மணம்வீசும் முல்லை நீ. கருகியும் காதல் விதை பரப்புகிறாய். - "என்னென்ன பிடிக்கும் உனக்கு?"
என்னவன் உன்னை மட்டுந்தான் எனக்கு. பின்னெங்கடி போனாய் தவிக்கவிட்டு. விண்ணோடும், மண்ணோடும் என் செய்வேன்? - என்னோடு வருவேன் என்றாய்.
எமனோடு எங்கு போகிறாய்? நரகத்தில் நான் துவழ, சொர்க்கத்தில் என்னடி செய்கிறாய்? - நான் காத்திருக்க வருவாய் குவளைபாலோடு.
ஏன்?சொர்க்கத்தில் நடக்கும் இரவுக்கு முந்திக்கொண்டு நீயும் காத்திருக்கிறாய். பிந்தியும் வருவேன் நான்,அந்தி சாயும். - பன்னீரில் தான் உனை நீராட்டுவேன்-சொட்டும்
நன்னீர் கருங்கூந்தலில் முகம் புதைவேன். வெந்நீர் மலர்மேனிக்கு வேதனையோ? கண்ணீருக்கென கண்களும் வரண்டதடி. - பாவை யெல்லாம் இனித்தது-தேன்
பாகு கூட கசக்குது போடி நீயும் முன்னால்-வருவேன் பேடி நானும் பின்னால். |
Posted by
கேசவன் முத்துவேல்
|
தொலைந்து போன தேவதையின் கலைந்து சென்ற கூந்தலின் மறந்து போன மலரின் வாசம் மட்டும் வீசும் வருடம் பல கடந்தும்., |
Posted by
கேசவன் முத்துவேல்
 |
• அவன் என் அத்தை மகன் - ஆயினும் அழைப்பதற்க்கில்லை ஆசையுடன் ஓர் வார்த்தை..,
• பள்ளி காலங்களில் கண்மாய் கண்டோம்., கைகள் மாறினோம்., காதல் கொண்டோமா ? - இல்
• வருவான் ,தருவான், பெறுவான் , மறைவான்., வைகறை காமம்., இது விடியும் வரை தான்.,
• வருடம் முறை வரும், திருநாள் தினம் வருமோ ? பருவம் உயிர் வரும்., பாவம் இவள் கை மஞ்சள் நீர் ., |
Posted by
கேசவன் முத்துவேல்
 |
கூடல் முடிந்து வருகையில் நெருடலாய்.., வேசியின் சிதைந்த நெற்றிக்குங்குமம் ! |