எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

அனலென காமம்




•அனலென காமம்
கனலென காதல்
மணல் திரித்த மஞ்சள்
கழுத்தில் முடிந்த கதையுது.

•கங்கையெனன காதல் இது.
எங்கு பொங்குது?எத்துணை பொங்குது?
பாவமெது?மோட்சமெது?
மங்கை மிதக்கும் பாற்கடலோ?

•உள்ளங்கால் பிடித்த போது,
உச்சி முகர்ந்த போது,
உதடு முத்தமிட்ட போது,
உணரவில்லை., பொய்யென இவை.

•ஒலிக்கவேண்டிய மேளம் - எனக்கு
ஒப்பாரியாய் ஏன் அழுகிறது?
விழித்திருக்க வேண்டிய இரவு - ஏன்
சுருண்டு இருண்டிருக்கிறது?

•நீயும்,நானும் சமைப்போம்.
ரசமெல்லாம் இனிக்கும்.
பிசைந்து ஊட்டும் போது
புளிப்பு ஏது? புலன் ஏது?

•எனக்கான மஞ்சள் நீர்த்தோ?
உனக்கென நீராடிவிட்டாய்.
வெற்றிடம் வெல்லும் காற்றென
வியாப்பித்துவிட்டாய் மனமெங்கும்.


மு.கேசவன்
2009-04-01



ஆறாம் விரல்






  • ஆறாம் விரல்
    இருந்திருந்தால் நன்றாயிருக்கும்
  • நேற்று நான்
    வாங்கிய முத்தத்தில் ஒன்று
    கூடியிருக்கும்

  • மு.கேசவன்
    2008-08-11

காதல் இசை








ஒரு மெல்லிய இசை
நம்மிடையே கசிந்து கொண்டே
இருக்கிறது..,

உன் மவுனம்
உன் ரசனையின்
சாட்சியாகிறது..,

வரிகள் இல்லாத இசை
உன் மவுனமாகின்றது.
நம் உறவின் புது மொழி,
கசிகின்ற இசை.,

விடைபெறு மட்டும்
இசை தனது முடிவை
தொடங்குகிறது..,

வியப்பித்திருக்கும் இந்த
மவுனம் நம் இருவரின்
உரையாடல்கள்.,

(எனக்கு தெரியும் - இது )
கணம் எங்கோ
அந்த கீதம்
இசைந்துகொண்டிருக்குமென.,

முதிர் கன்னி


என்ன தான் தாவணியிட்டு
மூடி மறைத்தாலும்
முடிவதில்லை…

அதுவே காட்டிக் கொடுத்துக்
கொக்களித்து சிரிக்கும்
கூடிக் கொண்டிருக்கும்

இவள் வயதை….

புதுப்பெண்







புதுப்பெண்

புருஷனை கைகோர்த்த புதுப்பெண்
திரும்பும் மட்டும் வேண்டிக்கிறேன் - அது,
நீயாய் இருக்கக்கூடாதென..,

உன்னிடம் நான் யாசிப்பது வேறொன்றுமில்லை,
ஒரு கோப்பை தேநீரும்,
நிலவின் கீழ் சில வார்த்தைகளும்..,

இரவின் நிலவு எனக்குச் சொந்தமில்லை,
கோப்பை தேநீர் உனக்கும்தான்

என் பிழை
உன் முதல் வார்த்தையில் - இந்த,
தேநீர் ஆறிவிட்டிருந்தது..,

Kesavan.M
2007