எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts

வந்தான் குகன்





  • அன்னமிடச் செய்தாள் - என்னை
    அண்ணனாக்கிக் கொண்ட வள்
    பின்னும் என்னடி ஊடல்- உன்
    மன்னவன் தேடி வந்த வேளையில்?
  • கைப்பிடித்து வந்தவன் - உள்ளங்
    கால் பிடித்தும் விடுவாள்
    தோள் சாயும் சமயம் - நான்
    தாழ் சேர்ந்து போவேனோ?
  • அன்னை உண்டு அருகில்
    அண்ண னழைப்பான் தொலைவில்
    நங்கைக் குண்டோர் நல்லூர்
    மங்கை மடிசாயும் கரைக்காற்று.
  • தாலிக்கு துடிக்கும் கழுத்து,
    தோழிக்கு துப்பட்டா எதுக்கு?
    நாழிக்கு உண்டோ பொறுமை?
    தாழிக்குள் திமிறும் காதல்.
  • திருநாள் வருடமும் உனக்கு.
    இருநா ளென அதை செய்குவோம்.
    வரும்நா ளெல்லாம் வசந்தமே,
    வருவான் நீயும் விழித்திரு

கங்கையின் துளிகள்





  • நீ இரசிக்கும் மட்டும்
    என் எழுத்துக்கள்.
  • பிழைகள் முழுதும்
    எனதாகிறது.
    திருத்தம் மட்டும் உனது.
  • என் கற்பனை கங்கையின்
    துளிகள் முழுதும் - உள்
    நீந்தும் மீன் - நீ
    எப்படி பருககூடும்?
  • நதியின் பல துளிகள்
    துளியின் ஒரு சிதறல்.
    சிதறல் ஊடுருவும்
    வானவில் நீ.
  • துளிகள் சிதறினும்
    வண்ணங்கள் குன்றா
    கவிதை நீ.
  • என் ஞாபகமாக
    நீ பறித்துக்கொண்ட
    எழுத்துக்களை
    பகிர்ந்துகொடு
  • அவை எனக்கும்
    பங்குண்டு.