Posted by
கேசவன் முத்துவேல்
|
- குச்சு கட்டியவன் ஒருவன் கண்
வச்சு காத்தவன் மருவன் - கை பிடிச்சு வந்தவன் இவனே வெண் பிச்சி கொண்டு வருவானோ? - வெட்கம் வந்த நேரம் - என்
பக்கம் கூற மறந்தாள் - புது சொர்க்கம் கண்ட பின்னும் இவள் தர்க்கம் இனி எங்கு வெல்லும்? - குத்தும் என மழித்தான்
குத்தம் என மறுத்தாள்., பத்தும் மிவள் மறக்கவேண்டும்., சுற்றம் என்று சூழுமோ? - புன்னை யாக்கி விட்டாள் என்னை
தன்னை மறக்கும் தமக்கை. பின்னும் ஊறும் தமிழ்., ஆதவன் கன்னி கூட ஆகும் எட்டு திங்கள்., [தமக்கைக்கு.,] மு.கேசவன் 2008-12-31 |
Posted by
கேசவன் முத்துவேல்
|
நதியோடு நாணல் கொண்ட உறவு உன்னோடு தோழி நான்., மழைத்துளியின் வெள்ளமென உன்னை இழுத்துக்கொண்டு நான், அப்படியே நிற்கிறாய் நீ., ஓடும் பாதையாவும் பல நாணல் சேர்த்துக்கொள்வேன் நிற்கும் நாணல் உன்மேல் மணல் வாரித்தூரிச்செல்வேன் நாணல் பல கண்டேன் உன் போல் ஒன்று இல்லை தோழி கானல் நீரும் நீதான் கண்டு கொண்டேன், வாழி. ஓடும் நதி நான். உன்னை தொலைத்துவிட்டேன் தோழி. தேடும் விழிகள் உனக்கு தெரிந்தும் கடந்தேன் நான். நதியென பிறந்துவிட்டேன்-நீ நாணலென நிற்பதற்கில்லை சதிகள் செய்யும் விதிகள் இது. கதி யறியேன் சேடி. கடல் கரைந்துவிட்டேன் என் கண்ணின் நீர் அறிவார் யார்? சொல்லடி! |