Posted by
கேசவன் முத்துவேல்

|
- வெயில் உரைப்பதில்லை.,
தேகம் கருப்பதில்லை., தாகம் தவிக்கவில்லை., உன்னோடு உரையாடிய மல்லபுரத்து மணல்., மு.கேசவன் 2008-12-30 |
Posted by
கேசவன் முத்துவேல்
|
நதியோடு நாணல் கொண்ட உறவு உன்னோடு தோழி நான்., மழைத்துளியின் வெள்ளமென உன்னை இழுத்துக்கொண்டு நான், அப்படியே நிற்கிறாய் நீ., ஓடும் பாதையாவும் பல நாணல் சேர்த்துக்கொள்வேன் நிற்கும் நாணல் உன்மேல் மணல் வாரித்தூரிச்செல்வேன் நாணல் பல கண்டேன் உன் போல் ஒன்று இல்லை தோழி கானல் நீரும் நீதான் கண்டு கொண்டேன், வாழி. ஓடும் நதி நான். உன்னை தொலைத்துவிட்டேன் தோழி. தேடும் விழிகள் உனக்கு தெரிந்தும் கடந்தேன் நான். நதியென பிறந்துவிட்டேன்-நீ நாணலென நிற்பதற்கில்லை சதிகள் செய்யும் விதிகள் இது. கதி யறியேன் சேடி. கடல் கரைந்துவிட்டேன் என் கண்ணின் நீர் அறிவார் யார்? சொல்லடி! |