எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label வளையல். Show all posts
Showing posts with label வளையல். Show all posts

பொய்யுரைக்கும் தோழி







தொலைந்து விட்ட உன்
கடிகாரத்தின் நேரத்தில் என்
காலத்தின் சுழற்சி நின்றுவிட்டது

அழைத்துபேசிய மணியேசையில்
ஒளித்து விட்டு வைத்துபோகிறாள்.
யாழையும்,குழலையும்.

நிழலென ஒதுங்கிய மரத்தின்,
அலரென மலரென உதிர்க்கிறாள்.
சுழற்சியின் இளைப்பாறுதல் இவள்.

வளை கொண்ட கரம்
கலை மறந்த தென்ன?
"தலைவன் வருவா னென".

பொய்யுரைக்கும் தோழிகூற்று
நதியுறுஞ்சும் பாலையின்
காமத்தின் அனல்.