எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label புசி. Show all posts
Showing posts with label புசி. Show all posts






உண்மை தான்!
ஒரு நல்ல கவிதை,
உன் போலவே
அரிதாகி விட்டது.,

வாசிப்பதும்
யோசிப்பதும்
யாசிப்பதும் - ஏன்
முயற்சிப்பதும் தான்.,

முற்றுப்புள்ளி யின்றி
தொடரவே யாசை
முடிந்துவிட்ட அந்த
கடைசி வரியில்.,

குறுகிய அத்தருணத்தில்
நிறைகள்,குறைகள்
நீடித்திருக்கலாம்-ஆயினும்
குறுகச் சொல்லவில்லை.,

புசித்தால் பசிக்கும்
சுவையின் தாபமிது.
முடியும் பயமின்றி
தொடரும் என்பயணம்.,

.,
.,
.,

விடைபெறு முன்
விம்மிச் சிரிக்கும்
கடைசிக் காட்சிகள்
உனக்கும் போலவே.,