எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts

அனலென காமம்




•அனலென காமம்
கனலென காதல்
மணல் திரித்த மஞ்சள்
கழுத்தில் முடிந்த கதையுது.

•கங்கையெனன காதல் இது.
எங்கு பொங்குது?எத்துணை பொங்குது?
பாவமெது?மோட்சமெது?
மங்கை மிதக்கும் பாற்கடலோ?

•உள்ளங்கால் பிடித்த போது,
உச்சி முகர்ந்த போது,
உதடு முத்தமிட்ட போது,
உணரவில்லை., பொய்யென இவை.

•ஒலிக்கவேண்டிய மேளம் - எனக்கு
ஒப்பாரியாய் ஏன் அழுகிறது?
விழித்திருக்க வேண்டிய இரவு - ஏன்
சுருண்டு இருண்டிருக்கிறது?

•நீயும்,நானும் சமைப்போம்.
ரசமெல்லாம் இனிக்கும்.
பிசைந்து ஊட்டும் போது
புளிப்பு ஏது? புலன் ஏது?

•எனக்கான மஞ்சள் நீர்த்தோ?
உனக்கென நீராடிவிட்டாய்.
வெற்றிடம் வெல்லும் காற்றென
வியாப்பித்துவிட்டாய் மனமெங்கும்.


மு.கேசவன்
2009-04-01



வந்தான் குகன்





  • அன்னமிடச் செய்தாள் - என்னை
    அண்ணனாக்கிக் கொண்ட வள்
    பின்னும் என்னடி ஊடல்- உன்
    மன்னவன் தேடி வந்த வேளையில்?
  • கைப்பிடித்து வந்தவன் - உள்ளங்
    கால் பிடித்தும் விடுவாள்
    தோள் சாயும் சமயம் - நான்
    தாழ் சேர்ந்து போவேனோ?
  • அன்னை உண்டு அருகில்
    அண்ண னழைப்பான் தொலைவில்
    நங்கைக் குண்டோர் நல்லூர்
    மங்கை மடிசாயும் கரைக்காற்று.
  • தாலிக்கு துடிக்கும் கழுத்து,
    தோழிக்கு துப்பட்டா எதுக்கு?
    நாழிக்கு உண்டோ பொறுமை?
    தாழிக்குள் திமிறும் காதல்.
  • திருநாள் வருடமும் உனக்கு.
    இருநா ளென அதை செய்குவோம்.
    வரும்நா ளெல்லாம் வசந்தமே,
    வருவான் நீயும் விழித்திரு

ஒரு மல்லி சூடவில்லை





  • ஒரு மல்லி சூடவில்லை
    ஒரு மல்லி கசங்கவில்லை
    ஒரு புடவை கூடவில்லை
    ஒரு புடவை களையவில்லை
  • அன்னம் பால் ஊட்டவில்லை
    கிண்ணம் தேன் சுவைக்கவில்லை
    எண்ணம் எங்கும் காதல்
    தின்னத் தோனும் காமம்.
  • விருந்தினர் வாராத நமதில்லத்தில்
    வெறுந்தரையில் நாம் காதலிப்போம்.
    எனை நீராட்ட முயற்சித்து
    உனை குளிப்பாட்டிக் கொள்வாய்.
  • ஒருதட்டில் பசியாருவோம்
    நான் புசித்திருக்க நீ கையலம்புவாய்
    நீ புசித்தவுடன் நான் விரல் கட்டே
    போட்டுக்கொள்வேன்.வலியில்லை.
  • ஒரு போர்வைக்குள் இருதூக்கம் எப்படி?
    சிறு குழந்தையென வினவுகிறாய்.
    ஒருபோர்வைக்குள் எதுக்கடி தூக்கம்?
    பெருங் குறும்புகள் புரிவோம் வா.,
  • வடிந்தவுடன் முடிந்துவிடும் காமமன்று
    விடிந்த பின்னும் ஓடும் காதல்நதி நமது
    ஒடிந்தாலும் மணம்வீசும் முல்லை நீ.
    கருகியும் காதல் விதை பரப்புகிறாய்.
  • "என்னென்ன பிடிக்கும் உனக்கு?"
    என்னவன் உன்னை மட்டுந்தான் எனக்கு.
    பின்னெங்கடி போனாய் தவிக்கவிட்டு.
    விண்ணோடும், மண்ணோடும் என் செய்வேன்?
  • என்னோடு வருவேன் என்றாய்.
    எமனோடு எங்கு போகிறாய்?
    நரகத்தில் நான் துவழ,
    சொர்க்கத்தில் என்னடி செய்கிறாய்?
  • நான் காத்திருக்க வருவாய் குவளைபாலோடு.
    ஏன்?சொர்க்கத்தில் நடக்கும் இரவுக்கு
    முந்திக்கொண்டு நீயும் காத்திருக்கிறாய்.
    பிந்தியும் வருவேன் நான்,அந்தி சாயும்.
  • பன்னீரில் தான் உனை நீராட்டுவேன்-சொட்டும்
    நன்னீர் கருங்கூந்தலில் முகம் புதைவேன்.
    வெந்நீர் மலர்மேனிக்கு வேதனையோ?
    கண்ணீருக்கென கண்களும் வரண்டதடி.
  • பாவை யெல்லாம் இனித்தது-தேன்
    பாகு கூட கசக்குது
    போடி நீயும் முன்னால்-வருவேன்
    பேடி நானும் பின்னால்.

சரி, நாம் கிளம்புவோம்






மலர்ந்த வெண்முல்லையோ ? பாறையை
பிளந்த கார் பனித்துளியோ? அச்சு
கரிந்த கயல் விழியோ ? - ஆங்கு
பணிந்த யான் , சிறு பரியோ?

சிவந்த இதழ் உனதோ ? - அதை
சிவக்க செய்தது எனத ன்றோ?
பரந்த மார் எனதோ ?- அதில்
படர்ந்த கொடி நீ யன்றோ?

புடவை எது எனக்கு அழகென்கிறாய்
புடவை எல்லாம் அழகை மறைக்குமென
உண்மையை நான் உளறினால்
உனக்கேன் வரும் பொய்க்கோபம்?

கட்டுபுத்தகம் மொத்தம் - என் மேல்
கொட்டி கொண்டு சிரிக்கிறாய் -பாவம்
தட்டு தடுமாறி வீழ்வேன் - உன்மேல்
விட்டு விலகி விளையாடாதே.,

நீ பேச ஆரம்பித்த முதற்சொல்- "சரி,
நாம் கிளம்புவோம்" அழகான பொய்யது.
நாழி கழிந்தது, நாளும் கழிந்தது,
நாம் மாறவில்லை. மீண்டும் பொய்க்கிறாய்
"சரி, நாம் கிளம்புவோம்"


மு.கேசவன்
2009-01-[16…23]

திங்கள் சூடும் மல்லி






கொங்கையை கொண்டாடுபவன் நானோ?
கங்கையென ஊறும் காமமிது
நங்கை நின் பால் - நான்
திங்கள் சூடும் மல்லி தற்று.

விரல் மீட்டிய காதல் ராகம்






  • எனக்குள் இருந்த
    வீணை நேற்று
    மீட்டெடுக்கப்பட்டது.
  • உன் மடியமர்ந்த
    புது வீணை நான்.
    காதல் ராகம் - நீ
    வாசிக்கிறாய்.
  • உன் விரல் மீட்டிய காதல் ராகம்
    உன் உதடு பதித்த
    ஈரத்தை உலர்த்திவிட்டு
    செல்கிறது . எங்கோ.,?

கல்லூரி காதலியே.,






வெற்றுத்தாளாய் நானிருந்தேன்
எண்ணங்கள் போலவே
வண்ணங்களோடு விளையாடினாய்.
துரிகைகளை இன்று தொலைத்துவிட்டேன்.

எந்த வண்ணம்
எந்த துரிகையோடது?
வண்ணங்களும் தொய்ந்துகொண்டிருக்கின்றன.,

உனக்கு தெரியும் .
உன் மடி மீது சாயாத நாட்கள்
என் தூக்கத்தை இழந்திருப்பேன்.
என் தூக்கம் இனி எங்கு செல்லும்?

பெண்கள் பல நீ அறிமுகம் செய்தாய்.
கண்களின் கனவாய் கலைந்துவிட்டனர்.

உன்னோடு நிரம்ப கிறுக்கியிருக்கேன்.
உணர்கிறேன் இன்று உனக்குமட்டுமில்லையென்று.,!
ஆறுதல் தேடி நான்
அலைந்துகொண்டிருக்கிறேன்.

மதிய வெயிலில்
இளைப்பாறிய காட்டு முட்புதர்.,
பஞ்சு மெத்தையும்
இனி பாரமாய் என் எதிர்.,

அடிக்கடி எழுதுய Apology.,
அறியவில்லை யாரும் என் psychology
நீ ஒருத்தி மட்டுந்தான்.,

கொண்டாட்டங்களை பகிர்ந்து
கொண்ட Canteen Slice.,
சோகங்களை சொல்லி
யழுத அரசன் Wines.,

"இவன்கிட்ட பார்த்து இருங்க"
புதிய HOD'யை அறிமுகபடுத்திய
பழைய வ[ா]த்தியார்.,

பரிட்சைக்கு பணமின்றி
பார்வை திருப்பிய போது
பறிதவித்து கட்டிய பசுங்கயல்.,
பாடம் ஆனது பொயில்.,

பிட்டுத் தாளை
கட்டாய் கொடுத்த முதல்வர் - அதையும்
விட்டு விலகிய வெறுமை
Arrear'ய் இன்னமும் DBMS..,

வளைவு களை வரையச் சொல்லியதில்
பெண்களின் சுழிவுகளை வரைந்த
Drawing Hall.,

பெண்கள் விடுதிக்குள் நான்
அடித்த Laser Torch.,
என்னிடமே அதுயாரென்று
கேட்ட கலைArch.,

மயங்கிக் கொண்டாடிய
ஆண்டு விழா இரவு.,
பாடிக் களாய்த்த
மேடைப் பாட்டு..,

அரண்டு போகச் செய்த
அறை நண்பன் மரணம்.,
அதற்கும் ஆறுதல்
தந்த உன் சரணம்.,

தோல்வியை எதிர்பார்த்து அழுகையில்
தோழி சொன்ன ஆறுதல்.,
தோழியின் தோல்விக்கு நான்
சொன்ன ஆறுதல்.,
என் வெற்றியின் சில தோல்விகள்.,

அப்பா வந்த நாளில்
தப்பாமல் தந்த Beer.,
தோழிக்கு.,

மழைத்த பொழுதெல்லாம்
அழைத்து குளித்த
மொட்டை மாடிக் குளியல்.,

தூங்கும் முன் நேரம்
பார்த்து உச் கொட்டிய
காலை 6 மணி.,

மதுரை வந்தும்
மல்லி மறந்தவனை
தோழியடித்த மலர்க்கோபம்.,

திருடன் வந்த சாக்கில்
எட்டிப் பார்த்த பெண்கள் விடுதி.,
கருடனாய் நான்
வேண்டி அதன் கண்கள்.,

காதலின் Token'ஐ
கடித்த Coffee-Day.,
அதையும் கடனுக்கு
கொடுத்த Hi-Way.,

இடிந்த விடுதியில்
நண்பன் கொண்ட காதல்.,
நானிருந்த காவல்.,
எங்களுக்கு விழுந்த நோதல்.,

கை தொடுகையில் அவள்
கோபம்., பின்னொரு நாள்
என் காதில் நுழைந்த சேலைநூல்.,
கண்ணில் தழுவிய சோலை புல்.,

எழுதிய என் காதல் கடிதங்கள்
எனக்காய் திருத்திய HOD.,
கொண்ட தோர்கதிருற்காய்.,
வேண்டிய பிராத்தனை..,

இன்னும் எத்தனை.எத்தனை.,
என் கல்லுரியே., - நீ
என் காதலியே..,








வார்தைகளை நான்
கிறுக்கிய காலம் போய்
வார்தைகள் எனை
கிறுக்குகின்றன ,இன்று.,

காலச் சக்கரத்தில்சிக்கிக்கொண்டது
என் மரபு,புதுக்கவிதை
நீ புலனாய்.,

உன் போலவே எல்லையில்லை,
தோட்டத்து முல்லையினும்
காட்டுக் கொடிகள் காட்சியன்றோ…?

என் விரல்களை ஒடிக்கின்றன,
வரிகள்,வலியில்லை.
வரிகளை பிரியமட்டும்…

என் எழுத்துக்கள்,என் வரி
என் வரிகள்,என் கவிதை
என் கவிதை எனதில்லை
என்ன
செய்வேன்? அய்யகோ…

காத்திருக்கிறேன்,
ஒரு நாள் கவிதை
இப்படி கிறுக்கும்.,

எப்படி இருக்கிறாய்,நீ…?

காதல் இசை








ஒரு மெல்லிய இசை
நம்மிடையே கசிந்து கொண்டே
இருக்கிறது..,

உன் மவுனம்
உன் ரசனையின்
சாட்சியாகிறது..,

வரிகள் இல்லாத இசை
உன் மவுனமாகின்றது.
நம் உறவின் புது மொழி,
கசிகின்ற இசை.,

விடைபெறு மட்டும்
இசை தனது முடிவை
தொடங்குகிறது..,

வியப்பித்திருக்கும் இந்த
மவுனம் நம் இருவரின்
உரையாடல்கள்.,

(எனக்கு தெரியும் - இது )
கணம் எங்கோ
அந்த கீதம்
இசைந்துகொண்டிருக்குமென.,

வேசியின் குங்குமம்





கூடல் முடிந்து வருகையில்
நெருடலாய்..,


வேசியின் சிதைந்த
நெற்றிக்குங்குமம் !

காதல் கடவுளிடம்..,




புருஷனை கைகோர்த்த புதுப்பெண்
திரும்பும் மட்டும் வேண்டிக்கிறேன்
அது, நீயாய்
இருக்கக்கூடாதென..,

மு.கேசவன்