எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts

பூக்களை எப்போது ஏமாற்றினாய்?






நீ தாவணியிட்டு வந்த
நாளெல்லாம் என்னால்
பூக்களை இரசிக்க முடியவில்லை.

உன்மேல் கோபம் கொண்ட
பூக்கள் என்னைத்தான்
திட்டுகின்றன. மலரை
எப்போது ஏமாற்றினாய்?

ஏகபத்தினி விரதன் வேண்டி
நீ இராமன் காண்கிறாய்.
சீதைக்குதானே தெரியும்,
இராமனின் சஞ்சலம்.
சீதைக்கும் எதிரி - நீ.

நீ தூதுசென்ற காதல் எல்லாம்
பாதி பிரிந்த கதை தெரியுமா?
கானும் கண்கள் யாவும் - உன்னை
கண்டு காதல் கொள்ளும் போதுமா?

போகும் பாதை எங்கும் உன்னை
கால்கள் தொடர்ந்து பிண்ணும்.
காலம் கடக்கும் கணங்கள் - உன்பால்
காதல் வேண்டி நிற்கும்!

நீ நடந்து கொண்டேயிரு.
திரும்பிவிட்டால் - என்
கவிதைகளும் கற்பனை
முடங்கிவிடும்.
தொடர்ந்துவருவேன் - நான்