எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label ஆசை. Show all posts
Showing posts with label ஆசை. Show all posts

சுற்றம் என்று சூழும் ?





  • குச்சு கட்டியவன் ஒருவன் கண்
    வச்சு காத்தவன் மருவன் - கை
    பிடிச்சு வந்தவன் இவனே வெண்
    பிச்சி கொண்டு வருவானோ?
  • வெட்கம் வந்த நேரம் - என்
    பக்கம் கூற மறந்தாள் - புது
    சொர்க்கம் கண்ட பின்னும் இவள்
    தர்க்கம் இனி எங்கு வெல்லும்?
  • குத்தும் என மழித்தான்
    குத்தம் என மறுத்தாள்.,
    பத்தும் மிவள் மறக்கவேண்டும்.,
    சுற்றம் என்று சூழுமோ?
  • புன்னை யாக்கி விட்டாள் என்னை
    தன்னை மறக்கும் தமக்கை.
    பின்னும் ஊறும் தமிழ்., ஆதவன்
    கன்னி கூட ஆகும் எட்டு திங்கள்.,


[தமக்கைக்கு.,]
மு.கேசவன்
2008-12-31

திங்கள் சூடும் மல்லி






கொங்கையை கொண்டாடுபவன் நானோ?
கங்கையென ஊறும் காமமிது
நங்கை நின் பால் - நான்
திங்கள் சூடும் மல்லி தற்று.

குமிழ் மட்டும் காமம்





  • நீர் சூழ்ந்த குமிழென
    ஆசைகள் சூழ்ந்த காதலில்
    நான் மிதந்து வந்தேன்.
  • உனக்கென கொண்டுவருகிறென்,
    கணக்கென கூடாத
    கட்டிலடங்கா காமங்கள்,
    பொத்திக்கொண்டு.
  • மட்டத்தின் மத்தியில்
    பட்டென தெறித்துவிடும்
    இந்த குமிழ்.
  • காற்றோடு கரையும் - என்
    வாசங்கள், - நீ இல்லை
    சுவாசிப்பதற்கு.
  • திசைகள் தேடியலையும் - இந்த
    களவுகள் என்
    கட்டி லில்லை.
  • குமிழ் மட்டும் காமம், - குங்குமச்
    சிமிழ் மாறும் தருணம் - இந்த
    காதல் மூழ்கிவிடும்.

மஞ்சள் நீர்






• அவன் என்
அத்தை மகன் - ஆயினும்
அழைப்பதற்க்கில்லை
ஆசையுடன் ஓர் வார்த்தை..,

• பள்ளி காலங்களில்
கண்மாய் கண்டோம்.,
கைகள் மாறினோம்.,
காதல் கொண்டோமா ? - இல்

• வருவான் ,தருவான்,
பெறுவான் , மறைவான்.,
வைகறை காமம்., இது
விடியும் வரை தான்.,

• வருடம் முறை வரும்,
திருநாள் தினம் வருமோ ?
பருவம் உயிர் வரும்.,
பாவம் இவள் கை
மஞ்சள் நீர் .,