Posted by
கேசவன் முத்துவேல்

|
•அனலென காமம் கனலென காதல் மணல் திரித்த மஞ்சள் கழுத்தில் முடிந்த கதையுது.
•கங்கையெனன காதல் இது. எங்கு பொங்குது?எத்துணை பொங்குது? பாவமெது?மோட்சமெது? மங்கை மிதக்கும் பாற்கடலோ?
•உள்ளங்கால் பிடித்த போது, உச்சி முகர்ந்த போது, உதடு முத்தமிட்ட போது, உணரவில்லை., பொய்யென இவை.
•ஒலிக்கவேண்டிய மேளம் - எனக்கு ஒப்பாரியாய் ஏன் அழுகிறது? விழித்திருக்க வேண்டிய இரவு - ஏன் சுருண்டு இருண்டிருக்கிறது?
•நீயும்,நானும் சமைப்போம். ரசமெல்லாம் இனிக்கும். பிசைந்து ஊட்டும் போது புளிப்பு ஏது? புலன் ஏது?
•எனக்கான மஞ்சள் நீர்த்தோ? உனக்கென நீராடிவிட்டாய். வெற்றிடம் வெல்லும் காற்றென வியாப்பித்துவிட்டாய் மனமெங்கும்.
மு.கேசவன் 2009-04-01
|
Posted by
கேசவன் முத்துவேல்
|
- அன்னமிடச் செய்தாள் - என்னை
அண்ணனாக்கிக் கொண்ட வள் பின்னும் என்னடி ஊடல்- உன் மன்னவன் தேடி வந்த வேளையில்? - கைப்பிடித்து வந்தவன் - உள்ளங்
கால் பிடித்தும் விடுவாள் தோள் சாயும் சமயம் - நான் தாழ் சேர்ந்து போவேனோ? - அன்னை உண்டு அருகில்
அண்ண னழைப்பான் தொலைவில் நங்கைக் குண்டோர் நல்லூர் மங்கை மடிசாயும் கரைக்காற்று. - தாலிக்கு துடிக்கும் கழுத்து,
தோழிக்கு துப்பட்டா எதுக்கு? நாழிக்கு உண்டோ பொறுமை? தாழிக்குள் திமிறும் காதல். - திருநாள் வருடமும் உனக்கு.
இருநா ளென அதை செய்குவோம். வரும்நா ளெல்லாம் வசந்தமே, வருவான் நீயும் விழித்திரு |
Posted by
கேசவன் முத்துவேல்
|
கொங்கையை கொண்டாடுபவன் நானோ? கங்கையென ஊறும் காமமிது நங்கை நின் பால் - நான் திங்கள் சூடும் மல்லி தற்று. |
Posted by
கேசவன் முத்துவேல்
|
- ஆறாம் விரல்
இருந்திருந்தால் நன்றாயிருக்கும் - நேற்று நான்
வாங்கிய முத்தத்தில் ஒன்று கூடியிருக்கும் மு.கேசவன் 2008-08-11 |