எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label கூந்தல். Show all posts
Showing posts with label கூந்தல். Show all posts

ஒரு மல்லி சூடவில்லை





  • ஒரு மல்லி சூடவில்லை
    ஒரு மல்லி கசங்கவில்லை
    ஒரு புடவை கூடவில்லை
    ஒரு புடவை களையவில்லை
  • அன்னம் பால் ஊட்டவில்லை
    கிண்ணம் தேன் சுவைக்கவில்லை
    எண்ணம் எங்கும் காதல்
    தின்னத் தோனும் காமம்.
  • விருந்தினர் வாராத நமதில்லத்தில்
    வெறுந்தரையில் நாம் காதலிப்போம்.
    எனை நீராட்ட முயற்சித்து
    உனை குளிப்பாட்டிக் கொள்வாய்.
  • ஒருதட்டில் பசியாருவோம்
    நான் புசித்திருக்க நீ கையலம்புவாய்
    நீ புசித்தவுடன் நான் விரல் கட்டே
    போட்டுக்கொள்வேன்.வலியில்லை.
  • ஒரு போர்வைக்குள் இருதூக்கம் எப்படி?
    சிறு குழந்தையென வினவுகிறாய்.
    ஒருபோர்வைக்குள் எதுக்கடி தூக்கம்?
    பெருங் குறும்புகள் புரிவோம் வா.,
  • வடிந்தவுடன் முடிந்துவிடும் காமமன்று
    விடிந்த பின்னும் ஓடும் காதல்நதி நமது
    ஒடிந்தாலும் மணம்வீசும் முல்லை நீ.
    கருகியும் காதல் விதை பரப்புகிறாய்.
  • "என்னென்ன பிடிக்கும் உனக்கு?"
    என்னவன் உன்னை மட்டுந்தான் எனக்கு.
    பின்னெங்கடி போனாய் தவிக்கவிட்டு.
    விண்ணோடும், மண்ணோடும் என் செய்வேன்?
  • என்னோடு வருவேன் என்றாய்.
    எமனோடு எங்கு போகிறாய்?
    நரகத்தில் நான் துவழ,
    சொர்க்கத்தில் என்னடி செய்கிறாய்?
  • நான் காத்திருக்க வருவாய் குவளைபாலோடு.
    ஏன்?சொர்க்கத்தில் நடக்கும் இரவுக்கு
    முந்திக்கொண்டு நீயும் காத்திருக்கிறாய்.
    பிந்தியும் வருவேன் நான்,அந்தி சாயும்.
  • பன்னீரில் தான் உனை நீராட்டுவேன்-சொட்டும்
    நன்னீர் கருங்கூந்தலில் முகம் புதைவேன்.
    வெந்நீர் மலர்மேனிக்கு வேதனையோ?
    கண்ணீருக்கென கண்களும் வரண்டதடி.
  • பாவை யெல்லாம் இனித்தது-தேன்
    பாகு கூட கசக்குது
    போடி நீயும் முன்னால்-வருவேன்
    பேடி நானும் பின்னால்.

என்னதான் பேசுவார்களோ ?






நான் எறியதிலிருந்து
என் முன் ஒரு ஜோடி.,
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.,

என்னதான் பேசுவார்களோ.,
கல்லூரியா யிருக்கும்., - இல்
காதலாகவு மிருக்கும்.

அவன் தோள் சாயவில்லை.,
அவள் கூந்தல் கோதவில்லை.,
என்ன ஜோடி இவர்கள்.,

புகைச்சல் தான் எனக்கு.,ஏன்
புரியவில்லை அவர்கட்கு?
கொஞ்சல் பேச்சும், குறும்பு புன்னகையும்.,

அடுத்த நிலையம் என் முறை.,
இன்னமும் பேசிக்கொண்டே .,

ஒரு கேள்வி
என்னிடம் மிச்சம்.,
எதற்கிந்த நெருக்கமான பயணம்?

அவரவர் கை பேசியில்
யவருடனோ., ஒருமணி
நேரம் வீணாய்?

வீசும் வாசம்,தேவதையின் கூந்தல்





தொலைந்து போன தேவதையின்
கலைந்து சென்ற கூந்தலின்
மறந்து போன மலரின்
வாசம் மட்டும் வீசும்
வருடம் பல கடந்தும்.,

நீளக் கூந்தல் தேவையில்லை







உன்னோடு உரையாடிய
அந்த நடுச்சாமம்
எனக்கு விடியவேயில்லை

நீ உசுப்பிவிட்ட
அந்த ஞாயிறு
இன்னமும் சாயவில்லை;எனக்கு,

என் மேஜை
நாட்காட்டி மட்டும்
ஏனோ ,பொய்யுரைக்கிறது, தினமும்.,

நம்மோடு நடமாடிய
நக்ஷ்த்திரங்கள்
பகலிலும் இப்பொழுது
புலப்படுகிறது.,

நீ பரிமாறிய
மீன் வறுவலின் கைம்மணம்
என்றென்றும் கற்பனையில்.,

நீளக் கூந்தல் எனக்கு
தேவையில்லை - அது
நீயா யிருக்கும் பட்ஷத்தில்.,

நீ கிசுகிசுத்த
என் காதல்
இன்னமும் காதில்.,

நீ சுவாசித்த
தென்றல் பத்திராய்
என் நெஞ்சினுள்.,

உன்னையும்,என்னையும்
தழுவிய நிலவின் குளிர்
ஸ்பரிசம் விலகவேயில்லை;அப்படியே.,

மலர்கள் மலர்ந்தால்
மட்டும்.,
நீ யிருக்கையில் எனக்கு
நீருக்குள் தாகமோ?