எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label தோள். Show all posts
Showing posts with label தோள். Show all posts

வந்தான் குகன்





  • அன்னமிடச் செய்தாள் - என்னை
    அண்ணனாக்கிக் கொண்ட வள்
    பின்னும் என்னடி ஊடல்- உன்
    மன்னவன் தேடி வந்த வேளையில்?
  • கைப்பிடித்து வந்தவன் - உள்ளங்
    கால் பிடித்தும் விடுவாள்
    தோள் சாயும் சமயம் - நான்
    தாழ் சேர்ந்து போவேனோ?
  • அன்னை உண்டு அருகில்
    அண்ண னழைப்பான் தொலைவில்
    நங்கைக் குண்டோர் நல்லூர்
    மங்கை மடிசாயும் கரைக்காற்று.
  • தாலிக்கு துடிக்கும் கழுத்து,
    தோழிக்கு துப்பட்டா எதுக்கு?
    நாழிக்கு உண்டோ பொறுமை?
    தாழிக்குள் திமிறும் காதல்.
  • திருநாள் வருடமும் உனக்கு.
    இருநா ளென அதை செய்குவோம்.
    வரும்நா ளெல்லாம் வசந்தமே,
    வருவான் நீயும் விழித்திரு

என்னதான் பேசுவார்களோ ?






நான் எறியதிலிருந்து
என் முன் ஒரு ஜோடி.,
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.,

என்னதான் பேசுவார்களோ.,
கல்லூரியா யிருக்கும்., - இல்
காதலாகவு மிருக்கும்.

அவன் தோள் சாயவில்லை.,
அவள் கூந்தல் கோதவில்லை.,
என்ன ஜோடி இவர்கள்.,

புகைச்சல் தான் எனக்கு.,ஏன்
புரியவில்லை அவர்கட்கு?
கொஞ்சல் பேச்சும், குறும்பு புன்னகையும்.,

அடுத்த நிலையம் என் முறை.,
இன்னமும் பேசிக்கொண்டே .,

ஒரு கேள்வி
என்னிடம் மிச்சம்.,
எதற்கிந்த நெருக்கமான பயணம்?

அவரவர் கை பேசியில்
யவருடனோ., ஒருமணி
நேரம் வீணாய்?