எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label கண்கள். Show all posts
Showing posts with label கண்கள். Show all posts

வழிசொல்வாய் நிதம்.






  • கட்டிவிட கேட்கிறது உன் கண்கள்
    கலைத்துவிட துடிக்கிறது என் கைகள்
    கட்டில் விலகாத இந்த காலை - என்
    கனவுகளை களவும் உன் சேலை.,
  • பசியென அழும் சிறுமழலை - நான்
    புசியென சொல்லாது பொய்யுரைக்கும் பெண்மை நீ
    தட்டுச்சோற்றில் தடுமாறும் தாபம் - உன்
    பட்டுவிரல் கடித்து பசியாரும்.
  • விடைபெறு மட்டும் வேண்டிநிற்கும்
    கடைசிபடி உன் காதல் முத்ததிற்கு.
    கண்ணத்து காதலெல்லாம் காட்சிமாறும் - அது
    வண்ணத்து பூச்சி கண்டு வழிமாறும்.
  • மறந்துவிட்டு சென்றிருப்பேன் மதிய உணவை
    தெரிந்தெடுத்து காத்திருப்பாய் கதவோரம்.
    வாரியணைத்து கட்டிக்கொள்வேன் - வந்து
    வாசற்கதவில் வழிசொல்வாய் நிதம்.

மு.கேசவன்
2008-12-25 20:41

உன் கண்களின் ரகசியம்








ஆற்றில் நீ
குளித்துக் கொண்டிருந்தாய்.,

மீன்கள் இரண்டு
உன்னிடத்தில் ஒட்டிக்கொண்டன..,

இன்னமும் அவை
துள்ளிக்கொண்டு..,

பயந்து விடாதே..,
உன் கண்களின் ரகசியம்.,
நான் யாரிடமும்
சொல்லமாட்டேன்

பத்திரம்

ஒரு கண்ணாடி யணிந்துகொள்
யாரேனும் பறிக்கக் கூடும்
காலையில் மலர்ந்த மரைகளென,
மையிட்ட உன் கண்களை..,

மு.கேசவன்
11/07/2007