எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

வழிசொல்வாய் நிதம்.






  • கட்டிவிட கேட்கிறது உன் கண்கள்
    கலைத்துவிட துடிக்கிறது என் கைகள்
    கட்டில் விலகாத இந்த காலை - என்
    கனவுகளை களவும் உன் சேலை.,
  • பசியென அழும் சிறுமழலை - நான்
    புசியென சொல்லாது பொய்யுரைக்கும் பெண்மை நீ
    தட்டுச்சோற்றில் தடுமாறும் தாபம் - உன்
    பட்டுவிரல் கடித்து பசியாரும்.
  • விடைபெறு மட்டும் வேண்டிநிற்கும்
    கடைசிபடி உன் காதல் முத்ததிற்கு.
    கண்ணத்து காதலெல்லாம் காட்சிமாறும் - அது
    வண்ணத்து பூச்சி கண்டு வழிமாறும்.
  • மறந்துவிட்டு சென்றிருப்பேன் மதிய உணவை
    தெரிந்தெடுத்து காத்திருப்பாய் கதவோரம்.
    வாரியணைத்து கட்டிக்கொள்வேன் - வந்து
    வாசற்கதவில் வழிசொல்வாய் நிதம்.

மு.கேசவன்
2008-12-25 20:41

No comments: