எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

கங்கையின் துளிகள்





  • நீ இரசிக்கும் மட்டும்
    என் எழுத்துக்கள்.
  • பிழைகள் முழுதும்
    எனதாகிறது.
    திருத்தம் மட்டும் உனது.
  • என் கற்பனை கங்கையின்
    துளிகள் முழுதும் - உள்
    நீந்தும் மீன் - நீ
    எப்படி பருககூடும்?
  • நதியின் பல துளிகள்
    துளியின் ஒரு சிதறல்.
    சிதறல் ஊடுருவும்
    வானவில் நீ.
  • துளிகள் சிதறினும்
    வண்ணங்கள் குன்றா
    கவிதை நீ.
  • என் ஞாபகமாக
    நீ பறித்துக்கொண்ட
    எழுத்துக்களை
    பகிர்ந்துகொடு
  • அவை எனக்கும்
    பங்குண்டு.

No comments: