Posted by
கேசவன் முத்துவேல்
|
- நீர் சூழ்ந்த குமிழென
ஆசைகள் சூழ்ந்த காதலில் நான் மிதந்து வந்தேன். - உனக்கென கொண்டுவருகிறென்,
கணக்கென கூடாத கட்டிலடங்கா காமங்கள், பொத்திக்கொண்டு. - மட்டத்தின் மத்தியில்
பட்டென தெறித்துவிடும் இந்த குமிழ். - காற்றோடு கரையும் - என்
வாசங்கள், - நீ இல்லை சுவாசிப்பதற்கு. - திசைகள் தேடியலையும் - இந்த
களவுகள் என் கட்டி லில்லை. - குமிழ் மட்டும் காமம், - குங்குமச்
சிமிழ் மாறும் தருணம் - இந்த காதல் மூழ்கிவிடும். |
Posted by
கேசவன் முத்துவேல்
 |
ஒரு மெல்லிய இசை நம்மிடையே கசிந்து கொண்டே இருக்கிறது.., உன் மவுனம் உன் ரசனையின் சாட்சியாகிறது.., வரிகள் இல்லாத இசை உன் மவுனமாகின்றது. நம் உறவின் புது மொழி, கசிகின்ற இசை., விடைபெறு மட்டும் இசை தனது முடிவை தொடங்குகிறது.., வியப்பித்திருக்கும் இந்த மவுனம் நம் இருவரின் உரையாடல்கள்., (எனக்கு தெரியும் - இது ) கணம் எங்கோ அந்த கீதம் இசைந்துகொண்டிருக்குமென., |