எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label midnight. Show all posts
Showing posts with label midnight. Show all posts

கல்லூரி காதலியே.,






வெற்றுத்தாளாய் நானிருந்தேன்
எண்ணங்கள் போலவே
வண்ணங்களோடு விளையாடினாய்.
துரிகைகளை இன்று தொலைத்துவிட்டேன்.

எந்த வண்ணம்
எந்த துரிகையோடது?
வண்ணங்களும் தொய்ந்துகொண்டிருக்கின்றன.,

உனக்கு தெரியும் .
உன் மடி மீது சாயாத நாட்கள்
என் தூக்கத்தை இழந்திருப்பேன்.
என் தூக்கம் இனி எங்கு செல்லும்?

பெண்கள் பல நீ அறிமுகம் செய்தாய்.
கண்களின் கனவாய் கலைந்துவிட்டனர்.

உன்னோடு நிரம்ப கிறுக்கியிருக்கேன்.
உணர்கிறேன் இன்று உனக்குமட்டுமில்லையென்று.,!
ஆறுதல் தேடி நான்
அலைந்துகொண்டிருக்கிறேன்.

மதிய வெயிலில்
இளைப்பாறிய காட்டு முட்புதர்.,
பஞ்சு மெத்தையும்
இனி பாரமாய் என் எதிர்.,

அடிக்கடி எழுதுய Apology.,
அறியவில்லை யாரும் என் psychology
நீ ஒருத்தி மட்டுந்தான்.,

கொண்டாட்டங்களை பகிர்ந்து
கொண்ட Canteen Slice.,
சோகங்களை சொல்லி
யழுத அரசன் Wines.,

"இவன்கிட்ட பார்த்து இருங்க"
புதிய HOD'யை அறிமுகபடுத்திய
பழைய வ[ா]த்தியார்.,

பரிட்சைக்கு பணமின்றி
பார்வை திருப்பிய போது
பறிதவித்து கட்டிய பசுங்கயல்.,
பாடம் ஆனது பொயில்.,

பிட்டுத் தாளை
கட்டாய் கொடுத்த முதல்வர் - அதையும்
விட்டு விலகிய வெறுமை
Arrear'ய் இன்னமும் DBMS..,

வளைவு களை வரையச் சொல்லியதில்
பெண்களின் சுழிவுகளை வரைந்த
Drawing Hall.,

பெண்கள் விடுதிக்குள் நான்
அடித்த Laser Torch.,
என்னிடமே அதுயாரென்று
கேட்ட கலைArch.,

மயங்கிக் கொண்டாடிய
ஆண்டு விழா இரவு.,
பாடிக் களாய்த்த
மேடைப் பாட்டு..,

அரண்டு போகச் செய்த
அறை நண்பன் மரணம்.,
அதற்கும் ஆறுதல்
தந்த உன் சரணம்.,

தோல்வியை எதிர்பார்த்து அழுகையில்
தோழி சொன்ன ஆறுதல்.,
தோழியின் தோல்விக்கு நான்
சொன்ன ஆறுதல்.,
என் வெற்றியின் சில தோல்விகள்.,

அப்பா வந்த நாளில்
தப்பாமல் தந்த Beer.,
தோழிக்கு.,

மழைத்த பொழுதெல்லாம்
அழைத்து குளித்த
மொட்டை மாடிக் குளியல்.,

தூங்கும் முன் நேரம்
பார்த்து உச் கொட்டிய
காலை 6 மணி.,

மதுரை வந்தும்
மல்லி மறந்தவனை
தோழியடித்த மலர்க்கோபம்.,

திருடன் வந்த சாக்கில்
எட்டிப் பார்த்த பெண்கள் விடுதி.,
கருடனாய் நான்
வேண்டி அதன் கண்கள்.,

காதலின் Token'ஐ
கடித்த Coffee-Day.,
அதையும் கடனுக்கு
கொடுத்த Hi-Way.,

இடிந்த விடுதியில்
நண்பன் கொண்ட காதல்.,
நானிருந்த காவல்.,
எங்களுக்கு விழுந்த நோதல்.,

கை தொடுகையில் அவள்
கோபம்., பின்னொரு நாள்
என் காதில் நுழைந்த சேலைநூல்.,
கண்ணில் தழுவிய சோலை புல்.,

எழுதிய என் காதல் கடிதங்கள்
எனக்காய் திருத்திய HOD.,
கொண்ட தோர்கதிருற்காய்.,
வேண்டிய பிராத்தனை..,

இன்னும் எத்தனை.எத்தனை.,
என் கல்லுரியே., - நீ
என் காதலியே..,