Posted by
கேசவன் முத்துவேல்
|
- குச்சு கட்டியவன் ஒருவன் கண்
வச்சு காத்தவன் மருவன் - கை பிடிச்சு வந்தவன் இவனே வெண் பிச்சி கொண்டு வருவானோ? - வெட்கம் வந்த நேரம் - என்
பக்கம் கூற மறந்தாள் - புது சொர்க்கம் கண்ட பின்னும் இவள் தர்க்கம் இனி எங்கு வெல்லும்? - குத்தும் என மழித்தான்
குத்தம் என மறுத்தாள்., பத்தும் மிவள் மறக்கவேண்டும்., சுற்றம் என்று சூழுமோ? - புன்னை யாக்கி விட்டாள் என்னை
தன்னை மறக்கும் தமக்கை. பின்னும் ஊறும் தமிழ்., ஆதவன் கன்னி கூட ஆகும் எட்டு திங்கள்., [தமக்கைக்கு.,] மு.கேசவன் 2008-12-31 |
Posted by
கேசவன் முத்துவேல்
|
இட்ட முத்ததின் ஈரம் உலர்வதற்குள், தொட்ட விரலின் ஸ்பரிசம் உணர்வதற்குள், பேசும் விழியின் அர்த்தம் புரிவதற்குள், படரும் தேகம் தேடல் தெரிவதற்குள், பற்றும் கரங்கள் நேசம் கட்டுவதற்குள் கலைந்து போகிறது,இந்த பாழாய் போன கனவு. |
Posted by
கேசவன் முத்துவேல்
|
இரவு , நிலவு தென்றல் , மன்றம் தேநீர் , குவளை விழிகள் , மவுனம்
இல்லாத நீ,நான் இழக்காத பிரிவு..,
நீ இருந்திருந்தால் பிரிந்துவிடுவாய் எனும் பயம்
நீ இல்லாவிடத்து எனக்கில்லை தோழீ., |