எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label flower. Show all posts
Showing posts with label flower. Show all posts

ஒரு மல்லி சூடவில்லை





  • ஒரு மல்லி சூடவில்லை
    ஒரு மல்லி கசங்கவில்லை
    ஒரு புடவை கூடவில்லை
    ஒரு புடவை களையவில்லை
  • அன்னம் பால் ஊட்டவில்லை
    கிண்ணம் தேன் சுவைக்கவில்லை
    எண்ணம் எங்கும் காதல்
    தின்னத் தோனும் காமம்.
  • விருந்தினர் வாராத நமதில்லத்தில்
    வெறுந்தரையில் நாம் காதலிப்போம்.
    எனை நீராட்ட முயற்சித்து
    உனை குளிப்பாட்டிக் கொள்வாய்.
  • ஒருதட்டில் பசியாருவோம்
    நான் புசித்திருக்க நீ கையலம்புவாய்
    நீ புசித்தவுடன் நான் விரல் கட்டே
    போட்டுக்கொள்வேன்.வலியில்லை.
  • ஒரு போர்வைக்குள் இருதூக்கம் எப்படி?
    சிறு குழந்தையென வினவுகிறாய்.
    ஒருபோர்வைக்குள் எதுக்கடி தூக்கம்?
    பெருங் குறும்புகள் புரிவோம் வா.,
  • வடிந்தவுடன் முடிந்துவிடும் காமமன்று
    விடிந்த பின்னும் ஓடும் காதல்நதி நமது
    ஒடிந்தாலும் மணம்வீசும் முல்லை நீ.
    கருகியும் காதல் விதை பரப்புகிறாய்.
  • "என்னென்ன பிடிக்கும் உனக்கு?"
    என்னவன் உன்னை மட்டுந்தான் எனக்கு.
    பின்னெங்கடி போனாய் தவிக்கவிட்டு.
    விண்ணோடும், மண்ணோடும் என் செய்வேன்?
  • என்னோடு வருவேன் என்றாய்.
    எமனோடு எங்கு போகிறாய்?
    நரகத்தில் நான் துவழ,
    சொர்க்கத்தில் என்னடி செய்கிறாய்?
  • நான் காத்திருக்க வருவாய் குவளைபாலோடு.
    ஏன்?சொர்க்கத்தில் நடக்கும் இரவுக்கு
    முந்திக்கொண்டு நீயும் காத்திருக்கிறாய்.
    பிந்தியும் வருவேன் நான்,அந்தி சாயும்.
  • பன்னீரில் தான் உனை நீராட்டுவேன்-சொட்டும்
    நன்னீர் கருங்கூந்தலில் முகம் புதைவேன்.
    வெந்நீர் மலர்மேனிக்கு வேதனையோ?
    கண்ணீருக்கென கண்களும் வரண்டதடி.
  • பாவை யெல்லாம் இனித்தது-தேன்
    பாகு கூட கசக்குது
    போடி நீயும் முன்னால்-வருவேன்
    பேடி நானும் பின்னால்.

December மலர்





  • எனக்கென பூத்த
    December மலர் - இந்த
    காதல் தினத்தில்
    காணாமல் போய்விட்டது.
  • பாலையினும் பிரியோய், - பனை
    ஓலையில் வருகிறாள் - சிறு
    பாடையில் போகிறாள்.
  • பிறக்கவிருந்த
    எட்டு பிள்ளையில்
    எந்த பிள்ளை கொள்ளிவைத்தான் ?
    எந்த பிள்ளை உரிவுடைத்தான்?
  • ஒற்றை ரோஜா உத்தேசித்திருந்தேன்
    மாலை ரோஜா பெற்றுக்கொண்டாய்.
    அத்துனை காதல்,என் மேலா?
  • எனக்கும் அரசியானவள்
    இனிக்கும் அரசிலானவள்
    வாய்க்கரிசி வாங்காது போகிறாள்

  • ஊதா புடவை உனக்கு
    எடுப்பென்றேன் - உன்
    உயிரை எடுக்குமென்றா?இல்.
  • உனக்கென கொண்டுவருகிறேன்.
    புடவையொன்று.சட்டம்போட்ட
    உன் நிழலுக்கும் அது
    எடுப்புதான்.
  • விடுதலையை நீஎடுத்துவிட்டு
    ஆயுட்சிறையை எனக்கொடுத்துவிட்டாய்.
    விருப்பந்தான்.
  • கேள்விமட்டுங் கொண்ட
    விநோத விடைதாளிது.
    எனக்கென இல்லாது-[மதிப்பெண்]
    நூறும் பெற்றுக்கொண்டாய்.
  • காப்பேனென கரம்பிடித்தாய்.
    காமமென சிறையாமர்ந்தாய்.
    காணோனென பறந்துவிட்டாய்.
  • ஒரு சிறுமலர் தான் என்காதல்.
    பட்டென மொட்டு வெடித்தாய்.
    வனமெங்கும் காதல் வீசுகிறது.
  • புத்தாண்டில் மொட்டுஇட்டு,
    Decemberல் பூத்து,
    காதல் தினத்தில் கருகிவிட்ட - என்
    December மலரே.,
  • என்னை
    சுவாசித்து,வாசித்து,நேசித்த
    December மலரே.,
  • எப்படியுரைப்பேன்?
    வனமெங்கும் வாசம்.
    துளித்தேனை தேடுகிறேன்.