எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label நினைவு. Show all posts
Showing posts with label நினைவு. Show all posts

சாலையோரம்.,







வெட்டப்பட்ட மரத்தின்
கொல்லப்பட்ட குஞ்சுகளுக்கான
கொத்தப்பட்ட இரைகளுடன்
கத்திக் கீறிச்சிடும் தாயின்
கடைசி செய்தி என்னவோ ?







இப்பொழுதெல்லாம் நீ எப்பொழுதாவது தான்
ஞாபகத்திற்கு வருகிறாய்…
எப்பொழுதெல்லாம் வருகிறாயோ,
அப்போழுதெல்லாம் அறைகிறாய்.
வலிக்கின்றது…

வந்த கணம் தெரிகிறது ,
சென்ற கணம் புரிவதில்லை
ஏன்?

இந்த கனவுகள் என்று
தொலையும்?
இந்த கணங்கள் எப்படி
கலையும்?

உன்னிடம் நான்
எதையும் பெற்றுக் கொள்ளவில்லை…
பொத்திப்பார்க்க,
நீ
மட்டும் ஏன்?
என்னையும்,எழுத்தையும்,?
எழுதிப்பார்க்கவா…?

எழுது தோழீ.,
சில கவிதைகள் பழகு.,