Posted by
கேசவன் முத்துவேல்
|
இட்ட முத்ததின் ஈரம் உலர்வதற்குள், தொட்ட விரலின் ஸ்பரிசம் உணர்வதற்குள், பேசும் விழியின் அர்த்தம் புரிவதற்குள், படரும் தேகம் தேடல் தெரிவதற்குள், பற்றும் கரங்கள் நேசம் கட்டுவதற்குள் கலைந்து போகிறது,இந்த பாழாய் போன கனவு. |
Posted by
கேசவன் முத்துவேல்
|
இரவு , நிலவு தென்றல் , மன்றம் தேநீர் , குவளை விழிகள் , மவுனம்
இல்லாத நீ,நான் இழக்காத பிரிவு..,
நீ இருந்திருந்தால் பிரிந்துவிடுவாய் எனும் பயம்
நீ இல்லாவிடத்து எனக்கில்லை தோழீ., |
Posted by
கேசவன் முத்துவேல்
 |
ஒரு மெல்லிய இசை நம்மிடையே கசிந்து கொண்டே இருக்கிறது.., உன் மவுனம் உன் ரசனையின் சாட்சியாகிறது.., வரிகள் இல்லாத இசை உன் மவுனமாகின்றது. நம் உறவின் புது மொழி, கசிகின்ற இசை., விடைபெறு மட்டும் இசை தனது முடிவை தொடங்குகிறது.., வியப்பித்திருக்கும் இந்த மவுனம் நம் இருவரின் உரையாடல்கள்., (எனக்கு தெரியும் - இது ) கணம் எங்கோ அந்த கீதம் இசைந்துகொண்டிருக்குமென., |