எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

காதல் இசை








ஒரு மெல்லிய இசை
நம்மிடையே கசிந்து கொண்டே
இருக்கிறது..,

உன் மவுனம்
உன் ரசனையின்
சாட்சியாகிறது..,

வரிகள் இல்லாத இசை
உன் மவுனமாகின்றது.
நம் உறவின் புது மொழி,
கசிகின்ற இசை.,

விடைபெறு மட்டும்
இசை தனது முடிவை
தொடங்குகிறது..,

வியப்பித்திருக்கும் இந்த
மவுனம் நம் இருவரின்
உரையாடல்கள்.,

(எனக்கு தெரியும் - இது )
கணம் எங்கோ
அந்த கீதம்
இசைந்துகொண்டிருக்குமென.,

No comments: