Posted by
கேசவன் முத்துவேல்
|
- என் முன் ஒரு தேவதை
அழுவதற்கு ஆயத்தமாகிறாள் அழகை இரசிப்பதற்கு நானும். - இளம்தேவதைகள் என்றும் அழகு.
இவள் இன்னமும். சிரிப்பதற்கு சொல்லாத காரணம் அழுவதற்கு என்ன தேடுவாள்? - சுயநலம் கொண்ட என்
கைக்குட்டை அவள் கண்ணீருக்கென காத்திருக்கும். - வழிந்தோடும் கண்ணீரில்
அவள் பெண்மை கொஞ்சி மிளிரும். - சிரிக்கும் என் உதடு கண்டு
பெண் சிணுங்கல் விம்மிப் பெருகும்., - சிந்தும் கண்ணீரை - என்
கைக்குட்டை சிறைகொண்டு உள்ளங்கையில் துள்ளும்! மு.கேசவன் 2008-09-25 |
Posted by
கேசவன் முத்துவேல்
|
- இவள் என் தேவதை.
எனினும், துளித்துவிட்ட மேகம். - விரும்பிய நிலம்
சேரும் நீர் அல்லாள். - சேரும் நிலம்
நிறம் மாறும் விதி இவள்தற்று. - வெட்கம் கொண்ட
பெட்டையென, கண்ணீர் சிந்தும் மழையில் நான் நனைகிறேன் |
Posted by
கேசவன் முத்துவேல்
|
தொலைந்து போன தேவதையின் கலைந்து சென்ற கூந்தலின் மறந்து போன மலரின் வாசம் மட்டும் வீசும் வருடம் பல கடந்தும்., |