எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

ஒரு தேவதையின் கண்ணீர்






  • என் முன் ஒரு தேவதை
    அழுவதற்கு ஆயத்தமாகிறாள்
    அழகை இரசிப்பதற்கு நானும்.
  • இளம்தேவதைகள் என்றும் அழகு.
    இவள் இன்னமும்.
    சிரிப்பதற்கு சொல்லாத காரணம்
    அழுவதற்கு என்ன தேடுவாள்?
  • சுயநலம் கொண்ட என்
    கைக்குட்டை அவள்
    கண்ணீருக்கென காத்திருக்கும்.
  • வழிந்தோடும் கண்ணீரில்
    அவள் பெண்மை கொஞ்சி
    மிளிரும்.
  • சிரிக்கும் என் உதடு கண்டு
    பெண் சிணுங்கல்
    விம்மிப் பெருகும்.,
  • சிந்தும் கண்ணீரை - என்
    கைக்குட்டை சிறைகொண்டு
    உள்ளங்கையில் துள்ளும்!

    மு.கேசவன்
    2008-09-25

No comments: