எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

சுற்றம் என்று சூழும் ?





  • குச்சு கட்டியவன் ஒருவன் கண்
    வச்சு காத்தவன் மருவன் - கை
    பிடிச்சு வந்தவன் இவனே வெண்
    பிச்சி கொண்டு வருவானோ?
  • வெட்கம் வந்த நேரம் - என்
    பக்கம் கூற மறந்தாள் - புது
    சொர்க்கம் கண்ட பின்னும் இவள்
    தர்க்கம் இனி எங்கு வெல்லும்?
  • குத்தும் என மழித்தான்
    குத்தம் என மறுத்தாள்.,
    பத்தும் மிவள் மறக்கவேண்டும்.,
    சுற்றம் என்று சூழுமோ?
  • புன்னை யாக்கி விட்டாள் என்னை
    தன்னை மறக்கும் தமக்கை.
    பின்னும் ஊறும் தமிழ்., ஆதவன்
    கன்னி கூட ஆகும் எட்டு திங்கள்.,


[தமக்கைக்கு.,]
மு.கேசவன்
2008-12-31

No comments: