எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

முத்ததின் ஈரம்







இட்ட முத்ததின் ஈரம் உலர்வதற்குள்,
தொட்ட விரலின் ஸ்பரிசம் உணர்வதற்குள்,
பேசும் விழியின் அர்த்தம் புரிவதற்குள்,
படரும் தேகம் தேடல் தெரிவதற்குள்,
பற்றும் கரங்கள் நேசம் கட்டுவதற்குள்
கலைந்து போகிறது,இந்த
பாழாய் போன கனவு.







இப்பொழுதெல்லாம் நீ எப்பொழுதாவது தான்
ஞாபகத்திற்கு வருகிறாய்…
எப்பொழுதெல்லாம் வருகிறாயோ,
அப்போழுதெல்லாம் அறைகிறாய்.
வலிக்கின்றது…

வந்த கணம் தெரிகிறது ,
சென்ற கணம் புரிவதில்லை
ஏன்?

இந்த கனவுகள் என்று
தொலையும்?
இந்த கணங்கள் எப்படி
கலையும்?

உன்னிடம் நான்
எதையும் பெற்றுக் கொள்ளவில்லை…
பொத்திப்பார்க்க,
நீ
மட்டும் ஏன்?
என்னையும்,எழுத்தையும்,?
எழுதிப்பார்க்கவா…?

எழுது தோழீ.,
சில கவிதைகள் பழகு.,