Posted by
கேசவன் முத்துவேல்
|
இட்ட முத்ததின் ஈரம் உலர்வதற்குள், தொட்ட விரலின் ஸ்பரிசம் உணர்வதற்குள், பேசும் விழியின் அர்த்தம் புரிவதற்குள், படரும் தேகம் தேடல் தெரிவதற்குள், பற்றும் கரங்கள் நேசம் கட்டுவதற்குள் கலைந்து போகிறது,இந்த பாழாய் போன கனவு. |
Posted by
கேசவன் முத்துவேல்
|
இப்பொழுதெல்லாம் நீ எப்பொழுதாவது தான் ஞாபகத்திற்கு வருகிறாய்… எப்பொழுதெல்லாம் வருகிறாயோ, அப்போழுதெல்லாம் அறைகிறாய். வலிக்கின்றது…
வந்த கணம் தெரிகிறது , சென்ற கணம் புரிவதில்லை ஏன்?
இந்த கனவுகள் என்று தொலையும்? இந்த கணங்கள் எப்படி கலையும்?
உன்னிடம் நான் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை… பொத்திப்பார்க்க, நீ மட்டும் ஏன்? என்னையும்,எழுத்தையும்,? எழுதிப்பார்க்கவா…?
எழுது தோழீ., சில கவிதைகள் பழகு., |