எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

நுணி மேலொரு பனி






விதவையாய் போய்விட்ட - என்
வெற்றுப்பக்கங்களை
வரிகள் கிறுக்கி
வளம் சேர்த்துவிட்டாள்

மழைத்த காலையின்
முளைத்த காளானென
உள்ளத்தின் காமம்
நட்டுவிட்டு போகிறாள்

பட்டுப்போன மரத்தின்
பொத்திவைத்த மொட்டுக்கான -நீர்
இட்டு காமம் வளர்க்கிறாள்

துளிர்க்கும் பச்சையென
பரவும் இச்சையுது.
காமத்தின் முத்தமென
நுணி மேலொரு பனி.

1 comment:

தமிழ் வசந்தன் said...

ஐயா உன்னைச் சந்திக்க வேண்டும்.
எங்கிருக்கிறாய்