எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

உயிரின் சுவாசம் !






உயிரின் சுவாசம் அறியாது
உன் மேனி வாசம் புரியாது - என்
உணர்வுகள் இங்கு இறந்துவிடும்
காதல் அங்கு பிறந்துவிடும்
காதல் இங்கு தொடங்கிவிடும்

மனம் என்றும்
தொடர் சடுகுடு விளையாடும்
மோதல் இங்கே முடிந்துவிடும் - உயிரின்
மோட்சம் இங்கே தொடங்கிவிடும்.

தூக்கம் ஏனோ தொலைந்துவிடும்
துயரம் மட்டும் தொடர்ந்துவிடும்.

ஆற்றல் இங்கே சிதைந்துவிடும்
ஆண்மை இங்கே அடங்கிவிடும்

உயிரும் ஒரு நாள் ஓய்ந்துவிடும்
திருநாள் வந்த
ஒரு தலைக் காதல் பிரிந்துவிடும்..,

No comments: